Saturday, 9 February 2013

தாகம்!

மயிலே!
தனி ஒரு சிலையாய்
உனை நிறுத்தி,
உன் பளிச்சிடும்
மேனிக்கு
சந்தனம் பூசி,

மயக்கிடும் மயிலாம்
உனக்காக- என்னை
மயங்க வைத்த
விழியின் நீரை
பன்னீராய் தெளித்து,

துளிர்த்திடும் அரும்பாம்
என் காதலை
பதித்திடும் வகையில்,
உன் தழைத்திடும்
கூந்தலுக்கு
மலராய் சூட்டி,

துடித்திடும் என் கரங்கள்
சோர்ந்திடும் வகையில்
உனை ஆரத்தழுவி,
தவித்திடும் உன் உதட்டை
கடித்திட தாகம்!
இதுதான் என் மோகம்!


No comments:

Post a Comment