Monday, 11 February 2013

இயற்கை கூட....!

அடியே!
உன் முகம் கண்டால்,
இயற்கை கூட
ஏமாந்துவிடும்!

நீ சிரித்துவிட்டால்,
முத்துமணி மாலைகூட
பொறாமை கொள்ளும்!

உன் நடை கண்டால்,
மயில் நடமாடுவதை
தவிர்த்துவிடும்!

உன் உருவம் கண்டால்,
என் அருந்தமிழ் நங்கை
தன் அழகு கிரீடத்தை
சூட்டி மகிழ்வாள்!

உன்னை ஊடுறுவிய
நான் மட்டும்,
உன் ஆழ் மனதின்
அழகு காதலை
திருடிக்கொண்டேன்!
போ.....!

1 comment:

  1. சிறந்த காதல் கவிதை

    ReplyDelete