Monday, 4 February 2013

சோர்ந்துவிடவில்லை!

வீணையே!
உன்னை சுரம்மீட்ட
துடிக்கும் என்கைகள்,
நொந்துபோய்விட்டன!

என் செவிகளும்
உன் இனிய இசையை
கேட்க துடிக்கின்றன!

என் உணர்வுகளோ
உன் இசையில்
துள்ளிக்குதிக்க,
தவிக்கின்றன!

ஆயினும் என்னால்
முடியவில்லை!
என் மனம் மட்டும்
சோர்ந்துவிடவில்லை!

என்றோ ஒரு நாள்...
இசை எனும் இனிமை
சேர்ப்பாய் என்வழ்வில்!

இதுவே உன்மேல்
நான் கொண்ட
மனத்திடம்!

No comments:

Post a Comment