Thursday, 7 February 2013

வேடப் பத்தினிகள்!

பெண்ணே!
உனை பார்க்க
செக்கிலிட்ட
எருதுவாய்,
சுற்றி சுற்றி
வந்தாலும்,
நீயோ...
மின்னி மறையும்
வின் மீனாய்...

கன நேரம்
என்மனதில்
குடிகொண்டு,
மறு நேரம்
மற்றானுக்கு,
மாயமாய்
மாற்றுகிறாய்
உன் மனதை!

இதயத்தை
வாடகைக்கு விட்டு,
காதலை விலையாய்
பெறும் பெண்ணிணமே!

அய்வருக்கு
ஒருத்தியாய்,
அழியாத
பத்தினியாய்,
விளங்கிய
பாஞ்சாலியும்
பத்தினியில்லை!

ஒருவனிடம்
ஒரு நிமிடம்
வாழ்ந்துவிட்டு,
மறு நிமிடம்
மாற்றான் தேடும்
நீங்களும்
பத்தினியில்லை!

பாழும் மனதை
பறிகொடுத்து,
பாதியிலே
சென்றுவிடும்
ஆண்கள்தான்...
உண்மையில்
பத்தினிகள்!

நீங்களோ...
காதலை நஞ்சாக்கி
கண்டவனுக்கும்
கொடுத்துவிட்டு,
ஆண்களின்
இறுதிச்சடங்கில்,
குளிர் காயும்
வேடப்பத்தினிகள்!
ஓ! பெண்கள்!
வேடப்பத்தினிகள்!

No comments:

Post a Comment