Tuesday, 26 February 2013

நல்லவன்!

நல்லவன்
நிலைப்பதில்லை!
இது நாம் கூறும்
பழம் மொழி!

நல்லோர்
நிலைக்கிறார்கள்
நலம்குலைந்து!
இது புதுமொழி!

நல்லவன்
நல்லவற்றை
மறக்கும்வரை
நசுக்கபடுவான்
இவ்வுலகில்!

நல்லவன்
நலமாய்
வாழவில்லை
இப்பூவுலகில்!
மாறாய்...
கேட்பாரற்று,
நோய்வாய்பட்டு
முடக்கப்படுவான்
ஒரு மூலையில்!

நன்றிகெட்ட
இவ்வுலகில்
நல்லது
நிலைத்தால்தானே,
நல்லவனும்
நிலைப்பான்!

No comments:

Post a Comment