என்ன!
நீங்கள் காதலர்களா?
சற்று நில்லுங்கள்!
கயவர்களின்
காவலை
உதறித்தள்ள,
உங்கள் உதிரத்தில்
துணிவிருக்கிறதா?
கனவுலகில்
சஞ்சரிக்கும் நீங்கள்,
நேருக்கு நேர் கவிபாட
துணிவிருக்கிறதா?
நெஞ்சத்தில்
மணம் நடத்தி
பலஇரவு கழித்த நீங்கள்,
உண்மயில் உலா வர
துணிவிருக்கிறதா?
உன்னைவிட்டு அவளும்
அவளைவிட்டு நீயும்,
கடைசிவரை பிரியாத
எண்ணத்துணிவிருக்கிறதா?
சுற்றத்தார் கெடுபிடியில்
சுழன்றுவிடாமல்
ஏற்றமிகு காதலை,
பறை சாற்ற
துணிவிருக்கிறதா?
நீங்கள் வாழப்பிறந்தவர்கள்
கெட்ட சாவை உதறித்தள்ள,
துணிவிருக்கிறதா?
இன்னல் பல வந்தாலும்
கடைசிவரை காதலை
பரிமாற துணிவிருக்கிறதா?
இல்லறம் செய்ய
இனிய பல காலம் உண்டு!
நல்லறமாய்
நயவஞ்சகர்கள் நடுவில்
வாழ துணிவிருக்கிறதா?
காதலர்களே!
இக்கேள்விகள் உங்கள்
மனதை துளைக்கவில்லை?
ஓ! காதல் கொண்ட
நெஞ்சங்கள்,
கண்டவற்றை யோசிக்காது!
கவலையில்லை
காதல் செய்யுங்கள்
தோல்வியை தழுவுங்கள்!
காதலில் மட்டும்தான்
நஞ்சும் இனிக்கும்!
நீங்கள் காதலர்களா?
சற்று நில்லுங்கள்!
கயவர்களின்
காவலை
உதறித்தள்ள,
உங்கள் உதிரத்தில்
துணிவிருக்கிறதா?
கனவுலகில்
சஞ்சரிக்கும் நீங்கள்,
நேருக்கு நேர் கவிபாட
துணிவிருக்கிறதா?
நெஞ்சத்தில்
மணம் நடத்தி
பலஇரவு கழித்த நீங்கள்,
உண்மயில் உலா வர
துணிவிருக்கிறதா?
உன்னைவிட்டு அவளும்
அவளைவிட்டு நீயும்,
கடைசிவரை பிரியாத
எண்ணத்துணிவிருக்கிறதா?
சுற்றத்தார் கெடுபிடியில்
சுழன்றுவிடாமல்
ஏற்றமிகு காதலை,
பறை சாற்ற
துணிவிருக்கிறதா?
நீங்கள் வாழப்பிறந்தவர்கள்
கெட்ட சாவை உதறித்தள்ள,
இன்னல் பல வந்தாலும்
கடைசிவரை காதலை
பரிமாற துணிவிருக்கிறதா?
இல்லறம் செய்ய
இனிய பல காலம் உண்டு!
நயவஞ்சகர்கள் நடுவில்
வாழ துணிவிருக்கிறதா?
காதலர்களே!
இக்கேள்விகள் உங்கள்
மனதை துளைக்கவில்லை?
ஓ! காதல் கொண்ட
நெஞ்சங்கள்,
கண்டவற்றை யோசிக்காது!
கவலையில்லை
காதல் செய்யுங்கள்
தோல்வியை தழுவுங்கள்!
காதலில் மட்டும்தான்
நஞ்சும் இனிக்கும்!

No comments:
Post a Comment