மயிலே! நீ...
மடல் வரைய
மயங்கி காத்திருந்தேன்!
மனக்குமிழில்
மாசற்ற கொந்தளிப்பு!
மங்கலாய்... நீ...
மசித்து வரைந்த
மாபெரும் மடல்!
மதிகெட்ட உள்ளத்தை
மடியவைக்க,
மணித்துளியில்
மலர்ந்தது!
மானே! உன்...
மடித்த மடலில்
மலர் வாசம் இல்லை!
மலையாய் உன் இதயம்
மடியக் கண்டேன்!
மாசில்லா உன் கண்களில்
மருண்ட பார்வையை,
மனக் கண்ணில் கண்டேன்!
மலரே! இது மாசற்ற மடல்!
மயக்கும் உன்னோடுதான்
மணம் பரப்பும் என் காதல்!
மடல் வரைய
மயங்கி காத்திருந்தேன்!
மனக்குமிழில்
மாசற்ற கொந்தளிப்பு!
மங்கலாய்... நீ...
மசித்து வரைந்த
மாபெரும் மடல்!
மதிகெட்ட உள்ளத்தை
மடியவைக்க,
மணித்துளியில்
மலர்ந்தது!
மானே! உன்...
மடித்த மடலில்
மலர் வாசம் இல்லை!
மலையாய் உன் இதயம்
மடியக் கண்டேன்!
மாசில்லா உன் கண்களில்
மருண்ட பார்வையை,
மனக் கண்ணில் கண்டேன்!
மலரே! இது மாசற்ற மடல்!
மயக்கும் உன்னோடுதான்
மணம் பரப்பும் என் காதல்!

No comments:
Post a Comment