பாடுபட்டுழைத்து
சேர்த்து வைக்கும்
தேனோ...
தேனீக்கு கிடைக்காது!
அது வேடனுக்கே
கிட்டும்!
தாமரையின் தேனை
குள வாழ் தவளை
உண்ணாமல்,
எங்கிருந்தோ வரும்
வண்டுதானே
சுவைக்கும்!
தன் ஈன்ற கன்றுக்கு
சுரக்கும் ஆவின் பாலை
தனி மனிதன்தானே
தட்டிப்பறித்து,
தன் மகவுடன்
சுவைக்கிறான்?
கட்டுக்குள்
வைக்கும் பொருள்
காப்பவர்க்கு கிட்டாது
ஒருபோதும்!
ஓ! என் இதயம்!
அதனை கட்டுக்குள்
வைத்திருந்தேன்,
அவளோ! ஓடிவந்து
தட்டிப் பறித்துவிட்டாள்!
சேர்த்து வைக்கும்
தேனோ...
தேனீக்கு கிடைக்காது!
அது வேடனுக்கே
கிட்டும்!
தாமரையின் தேனை
குள வாழ் தவளை
உண்ணாமல்,
எங்கிருந்தோ வரும்
வண்டுதானே
சுவைக்கும்!
தன் ஈன்ற கன்றுக்கு
சுரக்கும் ஆவின் பாலை
தனி மனிதன்தானே
தட்டிப்பறித்து,
தன் மகவுடன்
சுவைக்கிறான்?
கட்டுக்குள்
வைக்கும் பொருள்
காப்பவர்க்கு கிட்டாது
ஒருபோதும்!
ஓ! என் இதயம்!
அதனை கட்டுக்குள்
வைத்திருந்தேன்,
அவளோ! ஓடிவந்து
தட்டிப் பறித்துவிட்டாள்!



No comments:
Post a Comment