Friday, 22 February 2013

மாலை!

நேரம் இப்போதோ
மயங்கும் மாலை!
அவளோ நான்
அணிகின்ற மாலை!
காதல்! ஆனாலும்
சுரமில்லா வேளை!

அந்த மாலை...
அவளுடன்
நான்கழித்த
நினைவுகளுக்கு
கண்ணீர் மாலை!

சரசமாய் அவளுடன்
உறவாடி-நான்
அணிவித்த
காதல் மாலை,
கசங்கிய மாலை!

மாலைப்பொழுதில்
மனம்விட்டு பேசிய
பேச்சில் ஏற்பட்ட
அன்பின் ஓலை!

காலை மாலையாய்
காத்திருந்தாலும்,
கசங்கிய மாலையாய்
வீசிவிட்ட பெண்ணின்
களிப்பான லீலை,
என்றென்றும்
என் மனதில்
செப்பனிடாத சாலை!

மாலையை,
இன்று மாலையில்
மாற்றிக்கொள்ள
காத்திருந்த நேரம்,
அந்த மாலையை
அடுத்த நாள்
மாலைக்கு,
அவள் தள்ளிவைத்த
அன்பின் ஓரம்!

எத்தனை மாலை
வந்தால் என்ன?
அவளின் மாலை
எனக்குதான்!
அது....
இறுதி பயணத்தின்
பூமாலை!

1 comment:

  1. திருமருகல் தினத்தந்தி
    உங்களுக்கு அவளது மாலையுடன் நானும் மாலை வந்து பாராட்டு மழை வாழ்த்து மழை பொழியலாமா?

    ReplyDelete