Tuesday, 19 February 2013

ஊடலும் கூடலும்!

தன்னைத்தானே
சுற்றிவரும்
பூமியும்,
இணைந்து வரும்
சந்திரனும்,
ஒன்றையொன்று
எந்நாளும்
பிரிவதில்லை!

இருப்பினும்
காதலின் பிடியில்
சிக்கித்தவிக்கும்
சின்னக்காதலர்க்கு,
இரவுக்குளிர்ச்சியும்,
பகலின் வெப்பமும்,
முழுநிலவின்
இனிமையும்,
மறை நிலவின்
தனிமையும்,
மாற்றமான
உணர்வுகள்!

இதயத்தை வருடும்
முழு நிலவும்,
கொதிக்கும்
கோபத்தை தரும்
கதிரவனும்,
காதலர்க்கு
ஊடலும் கூடலும்!
ஓ! இது....
இயற்கையின்
பறிமாற்றம்!

No comments:

Post a Comment