Wednesday, 6 February 2013

அரக்கன்!

என் மன ஓசையிலே!
தாலாட்டு நான் பாட,
தப்பாத தாளமாய்
என் இதயம்
இசையமைக்க!

சிவந்த
உன் சின்ன உதடு,
சிரித்திட்ட ஓசை
கேட்டு,
ஓ! என்ற அலறல்
கேட்டேன்!
அது எங்கிருந்து
வந்தது?

அந்த மாபெரும்
அரக்கன்,
உள்ளத்தில்
கிறுக்கன்!
கள்ளத்தில்
காதலை,
களைத்தெறிய
துடித்திட்டான்
போலும்!

கவலைவிடு
கண்ணே!
எந்நாளும்
என் தாலாட்டு
உன் உள்ளத்தில்
ஊஞ்சலாட்டும்
உன்னை!
நிம்மதியாய்
நீயுறங்கு!


No comments:

Post a Comment