வசந்த காலம்!
எனை நினைத்து
நீ ஏங்கிய
சிலகாலம்
மறைந்து,
உனை நினைத்து
நான் ஏங்கும்
பல காலம்
வந்துவிட்டது!
நமக்குள்ளே
நாம் வளர்த்த
காதலின் தாகம்,
காத்திருக்க
வைத்துவிட்ட
பருவத்தின்
காலம்!
காலம் கடத்தி
காத்திருக்க
வேண்டாம்
நாமும்!
ஓடிவா கண்ணே!
இதோ வந்துவிட்ட
வசந்த காலம்,
நாம் செய்ய
காத்திருக்கும்
திருமணத்தின்
கோலம்!
No comments:
Post a Comment