தென்றலும் மயிலும்!
மயில் விரித்த
தோகையால்
தென்றல்
வந்ததா?
அல்லது...
தென்றல் வந்து
சில்லிட்டதால்,
மயில் தோகை
விரித்ததா?
பரவு தென்றல்
பரவிவிட்ட
மயில் தோகையே!
சிறிது சிறிதாய்
அசைந்து வந்து
என் கன்னத்தில்
உரசிவிட்டால்...
என் உயர்ந்த
உள்ளம்,
மயிலே! உன்னை
மழைநீரில்
குளிப்பாட்டி,
என் மூச்சுக்காற்றில்
உலர வைக்கும்!
No comments:
Post a Comment