மானே! உன்னை
பார்த்து பார்த்து
பூத்த கண்கள்,
சற்றாவது
இமைகளுக்கு
ஓய்வு கொடுக்க
மரண ஓலமிடுகிறது!
உன்னை சுற்றி சுற்றி
வந்த கால்கள்,
கடுமையாய்
சோர்வடைந்து,
ஒருபோதும்
நகர மறுக்கிறது!
உனக்கு மடல் வரைந்து
நொந்த கைகள்,
எனது எழுதுகோலை
தீண்ட மறுக்கிறது!
ஆனால்...
என் மனம் மட்டும்
உன்னைவிட வேகமாய்
ஓய்வில்லாமல் சிந்தித்து,
என் காதலை
பறை சாற்றிகொண்டே
இருக்கிறது!
அடி பெண்ணே!
என் மனதையும்
சோர்வடைய
செய்துவிடாதே!
பார்த்து பார்த்து
பூத்த கண்கள்,
சற்றாவது
இமைகளுக்கு
ஓய்வு கொடுக்க
மரண ஓலமிடுகிறது!
உன்னை சுற்றி சுற்றி
வந்த கால்கள்,
கடுமையாய்
சோர்வடைந்து,
ஒருபோதும்
நகர மறுக்கிறது!
உனக்கு மடல் வரைந்து
நொந்த கைகள்,
எனது எழுதுகோலை
தீண்ட மறுக்கிறது!
என் மனம் மட்டும்
உன்னைவிட வேகமாய்
ஓய்வில்லாமல் சிந்தித்து,
என் காதலை
பறை சாற்றிகொண்டே
இருக்கிறது!
அடி பெண்ணே!
என் மனதையும்
சோர்வடைய
செய்துவிடாதே!
.jpg)
No comments:
Post a Comment