Monday, 4 February 2013

நெஞ்சில் ஒரு முள்!

நெருஞ்சி முள்
நெருடிய
என் கால்களில்,
ஏனோ!
வலியே
தெரியவில்லை!

நெஞ்சில்
ஒரு முள்ளாய்,
என் மன அரங்கில்
உன்னை
பூட்டிவிட்ட
மாயமோ?

கண்ணே!
நீ கொடுத்த
துன்ப மிகுதியால்,
உன் காதல்
நெருடலினால்,
நெருஞ்சி முள்ளின்
வலிகூட,
இலகுவாய்
போய்விட்டதடி
எனக்கு!

உன் காதல்
எனக்கு வலியல்ல,
நெஞ்சில் சுட்ட வடு!


No comments:

Post a Comment