Sunday, 30 June 2013

திணிக்காதே... (பகுத்தறிவு)

பிறக்கின்ற
குழந்தைக்கு
எந்த மதமும்
சொந்தமில்லை!


நெற்றியில் பட்டை
வைணவ நாமம்
ஏசுவின் சிலுவை
அல்லாவின் பிறை
எதுவும்...
இருப்பதில்லை!


கடவுளைப் பற்றி
சாதியைப் பற்றி
மதத்தைப் பற்றி
இனத்தைப் பற்றி
எதுவும்...
தெரிவதில்லை!


எந்த பதிவும்
சொந்தமாக்கப்படாத,
புத்தம் புது கணினியாய்,
நாத்திகனாய்...
பிறக்கும் குழந்தைக்கு,
ஏன் திணிக்கின்றாய்
சாதியை, மதத்தை
கடவுளை?


மனிதனே!
தேவையற்ற
மூட நம்பிக்கையை
திணிக்காமல்
இருந்துபார்!
பகுத்தறிவு வளர்!

உன்குழந்தை
இந்த உலகத்திற்கு
சொந்தம்!
உலகமே
உன் குழந்தைக்கு
சொந்தம்!


No comments:

Post a Comment