Sunday, 2 June 2013

கேளிக்கை...

சிந்தனையை
அடகு வைத்த
செக்கு மாடுகள்,
சுதந்திரமாய்
திரியும் மனிதனை
பார்த்து...
சிரிக்கின்றன!


உருவத்திற்கு
துடிக்கும்
கூட்டுப்புழுக்கள்,
பறக்கும்
வண்டுகளை
பார்த்து...
சிரிக்கின்றன!


சண்டையிட்டு
திரியும்
திமிர் கொண்ட
எருதுகள்,
கொஞ்சி குலாவும்
பசுக்களை
பார்த்து...
சிரிக்கின்றன!


சிலரின் தவிப்புகள்
பலருக்கு
தெரிவதில்லை!
உணர்ச்சிகள்...
ஏளனப்படுத்த
படுகின்றன!
இயற்கையின்
தடுமாற்றம்!

No comments:

Post a Comment