Tuesday, 25 June 2013

சுமை குறைப்பு! (பகுத்தறிவு)

மூர்க்கத்தனமாய்
ஓவென்று சத்தம்!

தலைவிரித்தாடினாள்
எல்லை புரத்து
சாமியாய்!

அம்மனிடம்
குறை கேட்க
சுற்றிலும்
ஆயிரம் பேர்!


அவளின்
முக்கல்கள்,
முனகல்கள்
எல்லாம்...
அவளை
கட்டுக்குள்
வைத்திருந்த
கட்டுப்பாடுகள்!

மெய் மறந்து
பேயாட்டம்
ஆடினாள்!
காட்டுப்பாடற்று
அய்ந்து நிமிடம்
உளறினாள்!

ஒன்றுமறியா
அந்த கிராமத்து
பெண்ணுக்கு
கிடைத்த
இடைக்கால
மனச்சுமை
குறைப்பு

குறைக் கேட்கும்
முன்பே
எல்லைபுரத்து
அம்மன் ...
மலை ஏறியது!

No comments:

Post a Comment