Tuesday, 4 June 2013

சாவு மணி!

மயங்கிய
மஞ்சத்தில்,
மனத்தடுமாறல்கள்!

அவளின்
நினைவுகளுக்கு
இறுதி நேர
விடுதலை!

உறங்கிய
பின்னும்
கனவுகளில்
அவளின் ஓலங்கள்!


கானல் வரி பாடி
கடைசியாய்
நான் விடுக்கும்
அவளின் பிரிவுகள்!

உணர்ச்சிக்கு
நான் ஒலித்த
சாவு மணி!

தேவையில்லை
இனிமேல்...
அவள்!

என் இதயப்
பயணத்தில்...
அவளை விடுவிக்க
என் துடிப்புகள்!
விடையாய்
கண்ணீர்த்துளிகள்!

No comments:

Post a Comment