கவிதைக்கு தலைப்பு!
கவிதை
காண்பித்தேன்,
அவளுக்கு
கசந்தது!
கவிதை
கேட்கிறாள்...
எனக்கு
இனிக்கிறது!
இனிமை
கவிதைக்கு
இறுமாப்பு!
சோகக்
கவிதைக்கு...
இடைக்காலத்தடை!
அவள் சிரிப்பில்,
கண் சிமிட்டலில்,
இதமான அணைப்பில்,
ஆயிரம் ஆயிரம்
தமிழ் சொற்களின்
துள்ளல்கள்!
இதோ...
தேனான
இனிமைக் கவிதைக்கு,
தலைப்பிடுகிறேன்!
”காதல்”!
No comments:
Post a Comment