Monday, 17 June 2013

திணறிய அவள்!


நான் வடித்த
கவிதையை
படிக்க ...
திணறிய அவள்!

கருத்துக்களின்
ஆழத்தை
விளக்கியபின்
ரசிக்கிறாள்!


வாழ்வில்
மட்டுமே
முரண்பாடாய்
இருந்த எனக்கு,
என் கவிதைகளும்
முரண்பட்டதோ?

இனிமை கருத்தை
உள்ளடக்கிய,
அவளுக்கு புரியாத,
என் இனிய
கவிதையே!
நீ...
எனக்கு மட்டும்
சொந்தம்!

No comments:

Post a Comment