Sunday, 9 June 2013

இதயம் உன்னிடம்!

அவசரமாய்
எனைத்தழுவி,
ஆசை வார்த்தை
கூறிவிட்டு,
இதயத்தில்
காதல் எனும்
ஆனியை
தைத்துவிட்டு,
சென்றுவிட்டாய்...
நீ எங்கோ?


என் இதய வலி
நீங்கிட...
உன் நினைவுகளை
என் மனத்தில்
போக்கிவிட்டு,
நம் காதல்
கணக்கை
இத்துடன்
முடித்துவிடு!
இனியாவது
என் இதயம்
இளைப்பாறட்டும்!

No comments:

Post a Comment