Sunday, 23 June 2013

மீண்டும் வசந்தம்!

தனித் திரு
வசந்த மண்டபத்தில்
நானும் அவளும்!

அழகு பவனி
சுற்றி வர
அருகருகே
அமர்ந்து,
கூடி குலாவி,
கொஞ்சி பேசிய
நேரமெல்லாம்
நொடிப்பொழுதில்,
மின்னல் போல்
மறைந்ததுவே!


வசந்த காலத்து
தென்றல் காற்று
மீண்டும்...
வீசும் நாள்
எப்போது?

மீண்டும் வசந்தம்
வீசட்டும்!
அவளின் வரவுக்காக
காத்திருப்பேன்
காதலால்!

No comments:

Post a Comment