பாக்கு மரம்
வளத்தேன்
ஆச மச்சான்
நான் உனக்கு,
பாக்கும் வக்கலியே
பரிசமும் நீ
போடலியே!
தேக்கு மரம்
வளத்தேன்
கட்டில் செஞ்சி
அழகு பாக்க,
கண்ணாலமும்
கட்டலியே
கட்டிலுக்கும்
மரம் வெட்டலியே!
ஒதியன் மரம்
வளத்தேன்
அரசானி கால்
வைக்க,
ஆசமச்சான்
நீ ஒடிவந்து
கையும் பிடிக்கலியே
ஒதியனும்
வெட்டலியே!
மல்லிகப்பூ
தோட்டத்தில
மல்லிகப்பூ
பூத்திருச்சி,
ரோசாப்பூவெல்லாம்
மாலை கட்ட
காத்திருக்கு,
ஆச மச்சான்
உன்ன எண்ணி
ராவெல்லாம்
துங்கலியே!
அரளி மரம்
வச்சிருக்கேன்,
அரளி விதை
காய்ச்சிருக்கு,
ஆசமச்சான்
என்ன நீயும்
பரிதவிக்க விட்டுட்டியே!
பழசெல்லாம்
நான் மறக்கலியே
ஆசமச்சான்
உன்னை நெனைச்சி,
அரளி விதை
இனிக்குதைய்யா,
என் உசிறு
உன்ன நெனைக்குதய்யா!
வளத்தேன்
ஆச மச்சான்
நான் உனக்கு,
பாக்கும் வக்கலியே
பரிசமும் நீ
போடலியே!
தேக்கு மரம்
வளத்தேன்
கட்டில் செஞ்சி
அழகு பாக்க,
கண்ணாலமும்
கட்டலியே
கட்டிலுக்கும்
மரம் வெட்டலியே!
ஒதியன் மரம்
வளத்தேன்
அரசானி கால்
வைக்க,
ஆசமச்சான்
நீ ஒடிவந்து
கையும் பிடிக்கலியே
ஒதியனும்
வெட்டலியே!
மல்லிகப்பூ
தோட்டத்தில
மல்லிகப்பூ
பூத்திருச்சி,
ரோசாப்பூவெல்லாம்
மாலை கட்ட
காத்திருக்கு,
ஆச மச்சான்
உன்ன எண்ணி
ராவெல்லாம்
துங்கலியே!
அரளி மரம்
வச்சிருக்கேன்,
அரளி விதை
காய்ச்சிருக்கு,
ஆசமச்சான்
என்ன நீயும்
பரிதவிக்க விட்டுட்டியே!
பழசெல்லாம்
நான் மறக்கலியே
ஆசமச்சான்
உன்னை நெனைச்சி,
அரளி விதை
இனிக்குதைய்யா,
என் உசிறு
உன்ன நெனைக்குதய்யா!

No comments:
Post a Comment