Wednesday, 19 June 2013

தென்றலின் புலம்பல்!

இனிமை தரும்
தென்றலுக்கு
இசைவது போல்,
அந்த இனிய மலர்
அசைகிறது!

மலரின் நிறமோ
மயங்க வைக்கிறது!
சிறிது சிறிதாய்
தென்றலின்
உணர்ச்சியோ
ததும்புகிறது!


ஆயினும்...
உண்மை
பரிமாற்றத்திற்கு,
கால தாமதம் ஏன்?

பூவே இனியும்
என்னை நீயும்
உன்னை நானும்
தனிமை படுத்த
தேவையில்லை!

இதோ...
புயலாய்
வருகிறேன்!
உன் சின்ன
இதழ்களை
சிறைப்பிடிக்க!

No comments:

Post a Comment