Wednesday, 5 June 2013

இறக்கும்வரை ஏகாந்தம்!

என்னை
திணற வைத்த
மூக்கணாங்கயிற்றுக்கு
என் மனம் விடுத்த
சவால்!

எனக்குள்ளே
புது வேகம்!
இடை இடையே
சோகங்களின்
முட்டுக்கட்டை!

மனித சக்திக்கு
ஏற்பட்ட
மாபெரும்
சோதனை!

அவளை...
உதறத்துடித்த
என் இதயம்
ஏமாறவா
போகிறது?

ஆம்...
இன்னமும்
எவளிடமோ,
சிறைபடத்தான்
போகிறது!

இதய
ஏகாந்தத்திற்கு
முடிவு...?
இறந்த பின்னாவது
கிடைக்கட்டும்!

No comments:

Post a Comment