Friday, 7 June 2013

இருளுக்கு ஒரு அவசர ஒளி!

ஊறித்தவித்த
உன்னத
நினைவுகளுக்கு,
அதோ அந்த
புது மயிலின்
சாரல் மழை!

பழைய
சோகங்களுக்கு
அவசரமாய்
கொடுத்த விடை!

வாடிய மலருக்கு
இதயத்தில்
நான் கொடுத்த
புத்தம்புது வாசம்!


புதுப் புனலில்
சீற்றத்தில்
ஏற்பட்ட
சினஞ்சிறு
சோலை!

மீண்டும் மீண்டும்
காதல்...
இதய இருளுக்கு
புதிதாய் கிடைத்த
இடைக்கால ஒளி!

அணையும் வரை
எரியட்டும்!
இதயம்...
சற்று நேரம்
ஒளி பெரட்டும்!

No comments:

Post a Comment