Saturday, 29 June 2013

கல்லறை... காதல்...

சிரிப்புகள் கண்டு
மகிழ்ச்சி கொண்டால்
சிந்தனைக்கு
வேலையில்லை!

சோகத்திற்கு பின்
பரிசு தந்தால்,
சுகம் தரும் இன்பம்
மயங்கி நிற்கும்!

உறவுகளின் ஓரத்தில்
உறங்க வந்தால்,
விரிவு செய்ய
சின்னஞ்சிறு
தடுப்பு சுவர்!


கனவுகள்!
கவிதைகளின்
கலக்கங்கள்...
உறங்க
முயற்சிக்கிறேன்!

உன் உருவம்
மறையுமோ
என்ற அச்சத்தால்,
விழித்தே இருக்கிறேன்!

அவளின் உருவத்தை
ரசிக்கிறேன்...
நெருக்கத்தை
தவிற்கிறேன்!

அவளின் கொடிய
வார்த்தைகளால்...
நான் இறக்கிறேன்!

என் கல்லறை
இனிமேல்
காதல் செய்யும்!

No comments:

Post a Comment