Thursday, 6 June 2013

சோகமும் சுகமும்!

சோகங்களுக்குள்ளும்
சுக இராகங்கள்!
திணறி திணறி
தத்தளித்த அவளின்
நினைவுகளுக்கு,
நான் இசைத்த
புதுராகம்!


ஓ...
நான் மெட்டுக் கட்டி
பரிதவிப்பாய் தந்த
அவளின் சோகம்
காற்றாய் மறைந்து,
அவள் இதயத்தை
வருடியதோ?


அசுர வேகத்தில்
மீண்டும் காற்று
எனை நோக்கி!
அவள் களிப்புடன்
தந்த புதுராகம்,
என் உணர்ச்சிக்கு
கிடைத்த எதிர்ப்பு!
புதிய காதலுக்கோர்
பூந்தளிர்!

என் சோகத்திற்கு
சுகம் தர துடிக்கும்
புதியவள்?

No comments:

Post a Comment