Thursday, 27 June 2013

பெரியவளாய்.... (கிராமிய நடை)

சீவி முடிக்காத
சிக்குத் தலை!
தேய்த்து கழுவாத
வாடிய முகம்!

உலர்ந்த உதடுகள்
துடிதுடிக்க
ஓடி வந்த
அந்த செல்ல
பேத்தி...


பாட்டியின்
சீலைக்கிடையில்
சிக்கி கொண்டு
விம்மி விம்மி
அழுதாள்!

முகம் நிமிர்த்தி
பார்த்த பாட்டி
சிரித்து கொண்டே
சொன்னாள்...
பெரியவளாய்
ஆன பின்னே
அழலாமா?


No comments:

Post a Comment