பகலுக்கும் பிடிக்கவில்லை!
சொல்லிய
சொல்லுக்கு
காத்திருந்த
வேளை!
சுரமில்லாத,
இனிமையில்லாத
தனிமையின்
கொடுமை!
கொஞ்சி,
குலாவி,
கூறுபோட
நினைத்தால்...
அவள் என்னிடம்
இல்லை!
தனிமையின்
முனகல்
பகலுக்கும்
பிடிக்கவில்லை!
அதோ இருள்!
நான்...
அங்கு சென்றாவது
அவளை
தேடுகிறேன்!
No comments:
Post a Comment