Monday, 10 June 2013

அன்பு செய்... மறந்துவிடு!

மேதினியில்
பெருந்தன்மையாய்
சில மனிதர்கள்!

வாழ்வின்
வலைக்குள்
சிக்கி தவிக்கும்
சின்னஞ்சிறு
மனிதர்கள்
பல பேர்!

அன்பு...
சற்று நேரம்
தாமதித்து
யோசிக்கும்
அவமான
சின்னமாய்!


ஆற்பர்களின்
சிந்தனைக்குள்
அகப்பட்ட
வெகுமானமாய்
அன்பு!

வீணர்களின்
வெட்டிப்பேச்சுக்கு
விலைபோன
மலிவான
பொருளாய்
அன்பு!

வருங்கால
சந்ததிகளுக்கு
அன்பு இல்லை
என்று...
சொல்லித்தர
வேண்டும்!

நான்
இருக்கிறேன்!
என் சாவு
இருக்கிறது!
அதன் பின்
என் உருவ சிலை
இருக்கிறது!

என்னை
பார்த்தாவது
அன்பு செய்து
மறந்து விடுங்கள்!

No comments:

Post a Comment