Tuesday, 18 June 2013

காதலை கட்டவிழ்த்துவிடு!

கரையை
அலை உரசுவதால்
கரை அழிய
போவதில்லை!


கதிரவனின்
சீற்றத்தால்
அழகு முகங்கள்
அழிவதில்லை!

நிழல்களின்
தடுமாற்றங்கள்
வெளிச்சம்
வரும் வரைதான்!

அற்புத ஒளி
ஏங்கி நிற்க...
பொய்யான
இருள் எதற்கு?


மனங்களின்
உரசல்கள்
வாழ்வில்
இனிமையையே
தரும்!

பூடிவைத்த
இன்பத்தை,
இனிய காதலை
கட்டவிழ்த்துவிடு!

எனது இனிய
இதயம்...
காத்திருக்கிறது
உனக்காக!

No comments:

Post a Comment