Thursday, 13 June 2013

பூவை பறிக்காமல்...

அதோ
அந்த பூவை
தொடாமல்
ரசித்தேன்,
பூவின் வாசம்
இனித்தது!

தொட்டு
ரசித்தேன்,
பூவின் மென்மை
இனித்தது!

என் மனதுக்குள்
நிலை நிறுத்தி
ரசித்தேன்,
பூவின் அழகு
இனித்தது!


அருகில் சென்று
இதழ் பதித்தேன்,
பூவின் மகரந்தம்
தேனாய் ...
இனித்தது!

தொட்டும்
தொடாமலும்
இனிமை தரும்
அந்தப் பூவை
பறிக்காமல்
காதல் செய்வேன்
எந்நாளும்!

No comments:

Post a Comment