காதலுக்கு சாதியில்லை-என்ற
கனிவான சொல்லை
காலம் காலமாய்,
கவிஞன் சொன்னான்!
கன்னிப்பெண்ணே-நானும்
கடைசிவரை கனவுடன்,
கவிஞன் சொல்லில்
கலங்கிவிட்டேன்!
காவிய சொல்லை,
கடைமடையில் தள்ளிவிட்டு,
காதலுக்கு ஆண்சாதி,
கள்ளமான பெண்சாதி
காலத்தில் உண்டென்று,
கண்ணிமையில் காட்டிவிட்டாய்,
உன் கள்ளமான பெண்மனதை!
கண்ணே!
காதலுக்கும் சாதியுண்டு!
காலத்தின் புதுமொழி!
கனிவான சொல்லை
காலம் காலமாய்,
கவிஞன் சொன்னான்!
கன்னிப்பெண்ணே-நானும்
கடைசிவரை கனவுடன்,
கவிஞன் சொல்லில்
கலங்கிவிட்டேன்!
காவிய சொல்லை,
கடைமடையில் தள்ளிவிட்டு,
காதலுக்கு ஆண்சாதி,
கள்ளமான பெண்சாதி
காலத்தில் உண்டென்று,
கண்ணிமையில் காட்டிவிட்டாய்,
உன் கள்ளமான பெண்மனதை!
கண்ணே!
காதலுக்கும் சாதியுண்டு!
காலத்தின் புதுமொழி!
No comments:
Post a Comment