இளநங்காய் இறுமாந்து கேட்கிறேன்,
இளந்தமிழ் காதலனாய் உன்னை!
இளவல்கவர் கண்களோ இரட்டைகாப்பியம்!
இசை கழுத்தாரமோ கீழ்கணக்கு!
இடுப்பின் ஒட்டியாணமாய் பத்துப்பாட்டு!
இளமை காற்சிலம்பாய் எட்டுத்தொகை!
இனிகுரலாய் தமிழில் எழுச்சியும்- உன்
இழுமூச்சாய் இயல் இசை நாடகமும்!
வண்டு ஏமாந்து மொய்க்கும்-உன்
வழவழப்பு செவ்வுதடுகளில் தமிழ் பாடல்!
வண்ணக்கால்களை அசைத்தால் -உன்
வடிவழகுக்கு ஒப்பா பரதக்கலை!
வளமிகு உடலைக்கண்டு காதலானேன்,
வளைகரம் பற்றினேன் தமிழால் உன்னை!
வஞ்சி நீ! தமிழகத்தில் மிளிருங்கால்,
வடமூதாட்டி வலைவிரிப்பதா உனக்கு?
கலைமிகு கவியாக்கிய கவிஞர்கள்-உன்
கவியுடை கண்ணால் கவரப்பட்டார்கள்!
கன்னித்தமிழ் காரிகைக்கு காலமெல்லாம்
கவிகாதலர்கள் கடும்பணி செய்வாரே!
காலத்தால் அழியாத உன் இளமை,
கள்ளி அந்த வடமொழியால் அழியுமோ?
கண்ணே தமிழ்பெண்ணே என்றென்றும்,
காலடியில் பணிசெய்வார் தமிழ் காதலர்!
இளந்தமிழ் காதலனாய் உன்னை!
இளவல்கவர் கண்களோ இரட்டைகாப்பியம்!
இசை கழுத்தாரமோ கீழ்கணக்கு!
இடுப்பின் ஒட்டியாணமாய் பத்துப்பாட்டு!
இளமை காற்சிலம்பாய் எட்டுத்தொகை!
இனிகுரலாய் தமிழில் எழுச்சியும்- உன்
இழுமூச்சாய் இயல் இசை நாடகமும்!
வண்டு ஏமாந்து மொய்க்கும்-உன்
வழவழப்பு செவ்வுதடுகளில் தமிழ் பாடல்!
வண்ணக்கால்களை அசைத்தால் -உன்
வடிவழகுக்கு ஒப்பா பரதக்கலை!
வளமிகு உடலைக்கண்டு காதலானேன்,
வளைகரம் பற்றினேன் தமிழால் உன்னை!
வஞ்சி நீ! தமிழகத்தில் மிளிருங்கால்,
வடமூதாட்டி வலைவிரிப்பதா உனக்கு?
கலைமிகு கவியாக்கிய கவிஞர்கள்-உன்
கவியுடை கண்ணால் கவரப்பட்டார்கள்!
கன்னித்தமிழ் காரிகைக்கு காலமெல்லாம்
கவிகாதலர்கள் கடும்பணி செய்வாரே!
காலத்தால் அழியாத உன் இளமை,
கள்ளி அந்த வடமொழியால் அழியுமோ?
கண்ணே தமிழ்பெண்ணே என்றென்றும்,
காலடியில் பணிசெய்வார் தமிழ் காதலர்!
No comments:
Post a Comment