Monday, 28 January 2013

அருவிக்கு...!

அருவியே!
உன் சலசலப்பில்,
நிம்மதி இல்லை!
உன் நீர்த்தெளிப்பில்,
கனவுமில்லை!

உன் உடல்குளிர்ச்சியே,
நானறிந்த உண்மை!
வெளிவேடம்
வீண்பகட்டு!
நானறிவேன்
நன்றாய்!

என் கறைபடிந்த
இதயத்தில்,
கடைசிவரை
நீராய் நீயோடி,
கனநேரம்
கழுவிவிட்டால்,
பாழும் மனது
பரிசுத்தமாகிவிடும்!

என் ஆசை
அனைத்தும்,
அடித்துகொண்டு
போய்விடும்!

No comments:

Post a Comment