Friday, 25 January 2013

மனம்!

மனமே!
உன் குரங்குதனத்தில்,
பற்றுக்கிளையாய்
இருக்க மாட்டேன்,
ஒருபோதும்!

மலர்ச்சியுற்ற
உன்போக்கில்,
மெளனம் சாதிப்பேன்!

கனவிலும் கூட
உன் தாவலுக்கு,
இடமளியேன்!

மனமே!
நீ சிற்பமாய்
இருப்பினும்,
உயிரளிப்பது
என் கையில்!

No comments:

Post a Comment