Saturday, 6 September 2014

சும்மா ஒரு காதல் பாட்டு! (பயந்துடாதீங்க)

கழுத்த சுத்துன
கட்டுவிரியன் பாம்பே!
என் செஞ்சோடு நெஞ்சாக
நெளியிறியே! நீ! நெளியிறியே!


பாவம், பழியும் இல்லையடி
உன் சோகம் மட்டும் தொல்லையடி!
கண்ணுக்குள்ள கண்ண வெச்சி
உனக்குள்ள என்ன வெச்சி,
வெறுங் காத்தா..வெறுங்காத்தா...
என் உசிரு ஊசலாடி போச்சுதடி!

கழுத்த சுத்துன
கட்டுவிரியன் பாம்பே!
என் செஞ்சோடு நெஞ்சாக
நெளியிறியே! நீ! நெளியிறியே!

மோகம் எனக்கு முடங்கி போச்சி
தாகம் எனக்கு அடங்கி போச்சி,
ஆழம் மில்லா காதல் செஞ்சி
காகிதத்தில் கப்பல் விட்டேன்!
வெறுங் கனவா... வெறுங் கனவா...
என் காதல் பாலைவனமா போச்சுதடி!

கழுத்த சுத்துன
கட்டுவிரியன் பாம்பே!
என் செஞ்சோடு நெஞ்சாக
நெளியிறியே! நீ! நெளியிறியே!

No comments:

Post a Comment