Saturday, 6 September 2014

காதலுக்கு பின்?

ஆற்றுக்குள்
நீச்சலடித்து
அக்கரைக்கு
போனதுவும்,

சேற்றுக்குள்
துழாவி
அல்லி கிழங்கு
எடுத்ததுவும்,
எருமை
மேல் ஏறி
வயல் பயணம்
சென்றதுவும்,
மாட்டு வால்
பிடித்து...
குளத்து நீச்சல்
போட்டதுவும்,
மர பொந்தில்
கிளி பிடித்து,
நாக்கு சுட்டு
பூண்டு தேய்த்து,
தமிழ் பழக...
பழக்கியதும்!
ஓணான் பிடித்து
வாயில்
புகையிலை
திணித்து,
ஆட்டம் போட
வைத்ததுவும்!
சில்லுகோடு
விளையாண்டு
தடுமாறி
விழுந்ததுவும்,
நொண்டி கோடு
விளையாடி,
முட்டிக் கால்
தேய்ந்ததுவும்,
அம்மா அப்பா
விளையாட்டில்,
சாப்பிட்ட பின்
தூங்கியதுவும்,
மறந்ததடி...
மறந்ததடி...
உன் காதலுக்கு
பின்???????????

No comments:

Post a Comment